ஐ.டி.ரெடு தொடர்பாக அண்ணாமலை விளக்கம்
பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலையிடம் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், “வருமான வரித்துறை அதிகாரிகள் ஒட்டச்சத்திரம் அருகே ஒருநபரின் இல்லத்தில் சோதனை செய்து உள்ளனர். அவர் எனது தூரத்து உறவினர்தான். எங்கள் சொந்தக்காரங்களுக்கு அவரது குடும்பத்தில் இருந்து பெண் எடுத்து உள்ளோம். உதாரணமாக நானும் செந்தில் பாலாஜியும் உறவினர்கள்தான். நானும் செந்தில் பாலாஜியும் ஒரே கோயிலுக்கு செல்கிறோம். நானும் ஜோதிமணி அக்காவும் உறவினர்கள், நானும் சக்ரபாணி அண்ணும் உறவினர்கள், நானும் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரும் எனது உறவினர்தான். இதை ஒரு லாஜிக்காக எடுத்து அரசியல் பேசினால் எல்லோருமே உறவினர்கள்தான் என்று வரும். ரெய்டு நடந்தது என்னுடைய குடும்பமா?, ரத்த சொந்தமா? என்றால் நீங்கள் கேட்பதில் நியாயம் உள்ளது. கோவையில் வருமானவரித்துறை சென்ற ஆண்டு செய்த சோதனையில் எனக்கு பாதிப்பேர் உறவினர்கள்தான். இதுவரை வருமானவரித்துறைக்கு நான் போன் செய்ததே இல்லை. நான் வருமானவரித்துறைக்கு போன் செய்து ‘அவர் எனது உறவினர் அங்கு செல்லாதீர்கள்’ என்றா சொல்ல முடியும். அரசியலில் வருவதற்கு முன் செந்தில் பாலாஜி எனது வீட்டில் என்னுடன் ஒன்றாக அமர்ந்து உணவுசாப்பிட்டு சென்று உள்ளார். ஆனால் அதற்காக நான் தயவு தாட்சணை பார்ப்பது இல்லை” என கூறி உள்ளார்.