தனியார் தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் பேசிய திருமாவளவனிடம் ’விஜய் சரியான பாதையில் செல்கிறாரா?’ என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், தன்னுடைய கொள்கை என்ன என்பதையும், கொள்கை ஆசான்கள் யார் என்பதையும் முதல் மாநாட்டிலேயே அறிவித்து உள்ளார். நாம் பேசக் கூடிய சமூகநீதி அரசியலை அவர் ஏற்றுக் கொண்டு உள்ளார். அவருடைய அணுகுமுறைகள், நிலைப்பாடுகள் இந்த நிமிடம் வரையில் சரியாக உள்ளது என நம்புகிறேன். அவருக்கு என்னுடைய வாழ்த்துகள் என கூறினார்.