பிணத்தை வைத்து வேண்டுமானால் அழலாம்
அப்போது அவர் கூறுகையில், மின்சாரம் இல்லாமல் எப்படி வாழ்வது என்ற கேள்வி சரிதான். ஆனால் மின்சார உற்பத்தி செய்ய நிலக்கரி, அணு, அனல் மூலம் மட்டுமே மின்சாரம் செய்ய முடியும் என்றால் அனல் மின்சாரம் குறித்து யோசிக்கலாம். ஆனால் அதனால் ஏற்படும் சூழலியல் கேடுகள் பற்றி நேரடியாக பார்க்கலாம். உலர் சாம்பல் கொட்டி நிலம் பாதிக்கப்பட்டு இருக்கின்றது. நீர், உணவு, காற்று ஆகியவை நஞ்சாகிவிட்ட பிறகு வெளிச்சத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வீர்கள். பிணத்தை வைத்து வேண்டுமானால் அழலாம். பேசும் எல்லோரும் வேலை வாய்ப்பு, வளர்ச்சி என்று பேசுகிறார்கள். சம்பளத்தை வைத்துக் கொண்டு 3 வேலை பசி இல்லாமல் சாப்பிடலாம். ஆனால் குடிக்கும் நீர், சாப்பிடும் உணவு, சுவாசிக்கும் காற்று நஞ்சாகி போன பிறகு வாழ்வது எப்படி சாத்தியம்.