10. ஸ்ரீவில்லிபுத்தூர் கோயில் நிர்வாகம் விளக்கம்
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஆண்டாள் கோயிலில் உள்ள அர்த்த மண்டபத்திற்குள் செல்ல முயன்ற இளையராஜாவை வெளியே அனுப்பியதாக சர்ச்சை எழுந்த நிலையில், இது கோயில் நிர்வாகம் விளக்கம் அளித்து உள்ளது.ஆண்டாள் கோயிலில் கருவறைக்கு முன்பு உள்ள அர்த்த மண்டபம் பகுதியையும் கருவறை போன்றே பாவித்து வருகிறோம். அர்த்த மண்டபத்திற்குள் ஜீயர்களை தவிர பொதுமக்களுக்கு அனுமதி தரப்படுவது இல்லை. சம்பவத்தன்று ஜீயர் உடன் இளையராஜாவும் அர்த்த மண்டபத்தில் தவறுதலாக நுழைந்து உள்ளனர் என விளக்கம்.