அரசியலில் ரீ என்ட்ரி:
இந்த தோல்விக்குப் பின், அரசியலில் இருந்து சற்று ஒதுங்கி இருந்தவர், ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின் மீண்டும் அரசியல் களத்தில் பிஸியாக வேலை செய்தார். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின், அதிமுக ஓபிஎஸ் அணி, சசிகலா அணி, தினகரன் அணி என பலவாறாக பிரிந்தது. ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின், அதிமுக பொதுச்செயலாளராக வி.கே.சசிகலா ஆனார். ஆனால், அவரது துரதிர்ஷ்டம் அவர் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைசெல்லும் சூழல் ஏற்பட அக்கட்சியை அதிமுக துணைப்பொதுச்செயலாளர் என்னும் பொறுப்பினை உருவாக்கி டிடிவி தினகரனிடம் விட்டுச்சென்றார், சசிகலா. ஆனால், ஓபிஎஸ்ஸும் எடப்பாடி பழனிசாமியும் ஒன்றுகூடி, அதிமுக பொதுக்குழுவை கூட்டி, சசிகலாவையும் தினகரனையும் அக்கட்சியில் இருந்து நீக்கினர்.