தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் இன்றுடன் நிறைவடைய உள்ள நிலையில் சட்டப்பேரவை வளாகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் டங்ஸ்டன்ஸ் சுரங்க ஏலத்தை ரத்து செய்ய வேண்டும் என்று தனி தீர்மானத்தை சட்டமன்றத்தில் கொண்டுவந்தார். அப்பொழுது அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக எங்களுடைய கருத்துக்களை பதிவு செய்தோம்.