வயநாடு மாவட்டத்தில் மர்ம சத்தம்
நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாடு மாவட்டத்தில் பூமிக்குள் இருந்து மர்ம சத்தம் கேட்டுள்ளது. வயநாட்டில் உள்ள மேப்பாடியில் காலை 10.15 மணிக்கு இந்த சத்தம் கேட்டதாக அங்குள்ள மக்கள் தெரிவித்துள்ளனர். வைத்திரி தாலுகாவில் அன்னப்பாறை, தாழத்துவயலில், பினாங்கோடு, நென்மேனியில் இந்த சத்தத்தை மக்கள் உணர்ந்தனர். கண்டத்தட்டு நகர்வதால் ஏற்படும் நிலஅதிர்வு அல்ல என்று தேசிய புவியியல் ஆய்வு மைய அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.